Tuesday, May 10, 2011

இறைவன் ஒருவரே


இறைவன் ஒருவரே

       மதங்கள் எதுவாக இருந்தாலும் இறைவன் ஒருவராகவே இருக்க வேண்டும். செல்லும் பாதை வெவ்வேறாக இருப்பினும் சென்று அடையும் இலக்கு ஒன்று தான். அதையே முக்தி என்று அழைக்கிறது நம் இந்து மதம்.
       பழமையும் புதுமையும் போற்றும் நம் இந்து மதத்தில் தான் எத்தனை எத்தனை தெய்வங்கள் .. அது ஏன் என்ற ஐயம் அனைவருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் .. சரி தானே ?
       நம் மனம் தான் இறைவனை பிரித்து வைத்து உள்ளது. இறைவன் ஒருவரே.

         எந்த மதத்தை எடுத்து கொண்டாலும் இறைவன் ஒருவர் தான் என்பதை சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் விடை கிடைத்து விட போகிறது.
ஒருவராயின் அவர் பெயர் ??? அவர் யார் ? அவர் ஆணா இல்லை பெண்ணா ??? அவர் தன்மை என்ன ? அவர் வடிவம் என்ன ??
அவர் தான் பரப்ரம்மம். அவர் ஆணும் அன்று பெண்ணும் அன்று. அது பூரணத்துவம் . அனைத்தும் அவரே. அவருக்கு வடிவம் கிடையாது. பஞ்ச பூதங்களும் அதற்க்கு மேற்பட்ட தன்மையும் அவருக்கு உண்டு. அப்படியானால்  அவரை எப்படி வணங்குவது? எப்படி உணர்வது ?
சற்றே கடினம் தான் . ஆழ்மனதின் அமைதியில் நின்று த்யானத்தில் வணங்க வேண்டும் அவரை. அவரின் வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள காலம் அதிகம் ஆகும். தெரிந்து , புரிந்து கொள்ள நாம் ஆன்மீகத்தில் சிறிது தூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால் தான் நாம் முதலில் உருவமாய் வடிவமாய் நாம் உணர்ந்து கொள்ள புரிந்து கொள்ள உள்ள வடிவங்களில் உணர்த்து அவர்கள் அருளால் சற்றே ஆன்மீகத்தின் உள்ளே சென்று பின் இவர்களை அடைய வேண்டும்.

       இந்த பரப்ரம்மதிற்க்கும் கோவில் உள்ளது இந்திய திருநாட்டில். கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளத்தின் கொல்லதிற்க்கு அருகில் உள்ள ஓச்சிரா என்னும் இடத்தில உள்ளது பரப்ரமம் கோவில்.
ஏழை சிறுவன் ஒருவனுக்கு பரப்ரம்மம் காட்சி அளிக்க அந்த சிறுவனால் அவரை உணர்த்து கொள்ள முடிய வில்லையாம். உடனே அருகில் இருந்த போத்து(எருமை மாடு ) வடிவில்  காட்சி கொடுத்தாராம் பரப்ரம்மம்.
அந்த வடிவிலயே( நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா ) உற்சவ காலங்களில் வருகிறார்.



      அது போல உருவம் அற்ற நிலையில் உள்ள இறைவனையும் பல இடங்களில் வணங்கலாம் . சிதம்பரம் கோவிலில் உள்ள ரகசியம்(இறைவன் ஆகாய வெளியாய் ) இருக்கிறார். மேலும் திருவாரூர் கமலாம்பிகை சந்நிதானத்தில் உள்ள பீடம் (யாரும் நம் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளலாம்).

      இவை எல்லாவற்றிக்கும் மணிமகுடமாய் லலிதா சஹாஸ்ரநாமத்தின் அன்னை லலிதை காமேஸ்வரனை உள்ளடக்கிய( உள்ளார்ந்து விளங்கும் ) காமேஸ்வரியாய் ஆண்-பெண் வடிவ பாகுபாடு இன்று வணங்க படுகிறாள்.

[ அன்னை லலிதையாய் விளங்கும் தலங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்]
பரபிரம்மமமே போற்றி போற்றி 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்



4 comments:

  1. மிகவும் பயனுள்ள ஒரு பதிவு, நன்றிகள்.
    கூடவே, பேருந்தில், ரயிலில் போகும் வழி பற்றிய தகவல்களும் தந்தால் உதவியாக இருக்கும்.
    நாகராஜா கோவில் பற்றியும் விரைவில் பதிவு எழுதுங்கள்

    ReplyDelete
  2. ஒன்றே குலம் ..ஒருவனே தெய்வம் ..ஆன்மீக பயணம் தொடரட்டும் ........

    ReplyDelete
  3. பரபிரம்மமமே போற்றி போற்றி

    ReplyDelete