Thursday, January 27, 2011

அடியேன் தேடிக்கண்டுகொண்டேனே


அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

என்ன எழுத்து சித்தர் பாலகுமாரனின் தலைப்பு போல் இருக்கின்றதோ? அதே தான். நான் பார்த்து தேடி (மன்னிக்கவும் என்னை தேட வைத்து) கண்டு கொண்ட(ஆட்கொள்ளப்பட்ட) ஒரு அம்பிகையை பற்றி தான் இந்த பதிவு .
இந்து மதம் மிக புராதானமானது. பழமையும் பெருமையும் அதன் இரு தூண்கள். பல வழிகளில் இந்து மதத்தின் தொன்மையை சற்றே பார்க்கும் போது  மனம் பிரம்மிக்க தான் செய்கிறது . என்னை பொறுத்த வரை அதற்கு  உண்மையான காரணம் எது என்று எண்ணினால் அது பெண் வழிபாடாக இருக்கலாம். ஆக பெண்மையை, அதன் புனிதத்தை போற்றும் வகையில் நாம் ஒவ்வொரு  கோவிலிலும் அம்பிகையை (நாச்சியாரை ) வெவ்வேறு வடிவங்களில் போற்றி வணங்குகிறோம். ஆக அன்னையின் ஆயிரம் வடிவங்களில்(என் சித்தம் முழுதும் உள்ள வடிவங்களில்) இரண்டு வடிவம் உள்ள கோவிலை பற்றி பார்போமா ?? வாருங்கள் என்னுடன்........
திருவாரூர்.......... மாவட்டம் என்று வடிவம் எடுத்துள்ள இடம்.. இங்கு மணிமுத்தாறு நதியும் கமலாலயக் குளமும் வளம் சேர்க்க அங்கு நடுநாயகமாய் இரண்டு அம்பிகைகள்.
திருவாரூர் என்றதும் நினைவிற்கு உடனே வருவது ஆழித்தேரும் தியாகேசரும் தான். பின்ன மால் வழிபட்ட மூர்த்தம் அன்றோ ? சிறப்பு இல்லாமல் இருக்குமோ ?

சிவபிரானே ஆலால சுந்தரரிடம் பொன்னை பத்திரமாக எடுக்க சொன்ன கமலாலய குளமும் உள்ள புண்ணிய பூமி அன்றோ?
கோவிலின் குளத்தின் நடுவுலயே ஒரு கோவில் (நடுவாங்கோவில் ) உள்ள பூமி.

  {மேலும் இந்தக் கோவிலின் சிறப்பை இந்த பதிவில் பார்க்கவும்
http://aanmiga-payanam.blogspot.com/2010/02/blog-post_15.html  [நன்றி பதிவு எழுதிய நல்ல உள்ளத்திற்கு(கீதா சாம்பசிவம்)}
சரி மற்ற சிறப்புகளை அந்த பதிவில் பார்த்தீர்களா ?? நாம் நம்முடைய விஷயத்திற்கு வருவோம்.
இந்த பூமிலே ஒரு பெண்ணாக பிறந்தவள் இறைவனை அடைய இரண்டு வழிகள் உண்டு
·                     நல்லறமாக இல்லறம் நடத்தி இறைவனை அடைவது
·                     யோக வடிவில் துறவறம் மேற்கொண்டு இறைவனை அடைதல்
சற்றே வேத காலத்தில் பார்த்தால் பெண்களை மேலே சொன்ன இரண்டு வடிவில் சொல்லி இருக்கிறார்கள் ஸத்தியோவோது மற்றும் பிரஹ்மாவாதினி  தான் மேலே சொன்ன இரு வகை பெண்கள்.
சரி இந்த கதை ஏன் இங்கு எதற்கு என்று எண்ணுவது புரிகிறது?
இந்த கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருவரும் இந்த இரண்டு வகை பெண்களின் வடிவம்
இந்த கோவிலில் எத்துனை முக்கியம் தியகராஜரோ அத்துனை ஏன் அதற்கும் மேல் முக்கியம் உள்ளவள் அன்னை கமலாம்பிகை. மேலே சொன்ன பெண்களில் இந்த அன்னை யோக வடிவம் கொன்டவள். ஆம் யோகத்திற்க்கே உள்ள அன்னை இவள். இந்த அன்னை வித்யாச வடிவம் கொன்டவள். இவள் பிறை சூடி கங்கை அணிந்து நந்தி வாகனம் கொண்டு தனிக்கோவிலில் கொடிமரம் கொண்டு இருப்பவள். இவளின் வடிவம் பார்போமா??



கிழக்கு(வடகிழக்கு) நோக்கி எழுந்தருளும் நம் அன்னை  நான்கு கரத்தினள். மேல் கரங்களில் ஒன்றில் பாசக்கயறு மற்றொன்று அக்ஷயமாலை. கீழ் கரத்தினில் வலது கரம் தாமரையை தாங்க இடது கரமோ தாங்கு கரமாய் அம்மையின் இடையை பற்றி கொள்கிறது. ஆனால் அலங்காரத்தில் மேல் கரங்கள் தெரியாது.
கமலம்பிகையின் திருவடிகள் வியப்புறு வண்ணம் உள்ளன. ஒரு கால் மீது மற்றொரு கால் இட்டு யோகாசனத்தில்(த்யானத்தில் யோக வடிவில்) இருக்கிறாள். இந்த கோலத்துக்கே “சிவயோகம் அல்லது சிவராஜயோகம் அல்லது வீரராஜயோகம் என்று பெயர். அதாவது சின்னஞ்சிறு பெண் போலவும் அதே நேரத்தில் அண்ட பகிரண்டமும் கரைக்கண்ட ஞான உச்சமும் கொன்டவள்.
இந்த அன்னையும் லலிதையின் வடிவமாகவே எனக்கு தோன்றுகிறது. ஏன் எனில் அன்னையின் பெயரில் உள்ள க கலைமகளையும் ம மலைமகளையும் ல அலைமகளையும் குறிப்பிடுவது மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி அக்ஷமாலை தாங்குபவள். உமையவள் பாசத்தையும் லக்ஷ்மி தாமரையும் தாங்குபவள் ஆனால் இங்கு அன்னையோ மூன்றையும் வைத்து இருக்கிறாள். ஆக அவள் மூன்று அன்னையையும் உள்ளடக்கிய ஒரே வடிவமாய் இருக்கிறாள் அன்னை.
பிறையும் கங்கையும் சூடியவள்(ஆமாம் யோகிகளின் திருமுடி குளிர்ந்து இருக்கும் பிரகாசமாகவும் இருக்கும்). நந்தி வாகனம் கொன்டவள்
(சிவாம்சமும் பொருந்தியவள் பின்னே லலிதை என்றும் காமேஸ்வரனை உள்ளிலே கொன்டவள் தானே). தனி மண்டபத்தில் சங்க,பதும நிதி வாயிலை காக்க ஆட்சி புரிகின்றாள்.
உற்சவர் மனோன்மணி. (மனோன்மணி அன்னையை பற்றி பின் ஒரு தனி பதிவு போடுகிறேன் ). அத்துணை சிறப்பு இந்த பெயருக்கு. சுருக்கமாக மனங்களை தட்டி எழுப்புபவள்.
சரி யோக வடிவை தரிசித்தோம். செல்வோமா இல்லற வடிவை பார்க்க???



இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறாள் இந்த அன்னை. நீலோத்பலாம்பிகை. தூயத் தமிழில் அல்லியங்பூங்கோதை. பெயரில் இருந்தே கையில் அல்லி(குவளை) ஏந்தியவள் என்று புரியும் ஆம் சரி தான். கருங்குவளையை ஏந்தியவள் வலது கரத்தில். இடது கரமோ ஆனந்தத்தின் பிறப்பிடம், உத்வேகத்தின் தேன்கிண்ணம். ஆம் சேடி பெண் ஒருத்தி முருகனை கையில் தூக்க அவனது பிஞ்சு விரலை பற்றி இருக்கிறது அன்னையின் கரம்.
ஆம் அன்னையின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்ய ஒளி. பின்னே இருக்காதா ?? உலகத்துக்கே நாயகி ஆனாலும் தன் பிள்ளையை கையோடு வைத்த ஆனந்தம்.
ஆக இதன் உள்ளார்ந்த விளக்கம் தான் என்ன ?? இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் அன்னை பராசக்தியின் பிள்ளை அன்றோ ? மகனே நான் இருக்கிறேன் உன்னை கை பிடிக்க கரம் பற்றி நான் காப்பேன் என்று அவள் புன்சிரிப்பு காட்டுகிறது. அன்னை வரப்ரசாதி. இவளுக்கு தனி சிவ மூர்த்தம் இல்லை.
அன்னை கமலம்பிகயோ யோக நெறிக்கு வழிக்காட்ட இவளோ இல்லற நல்லறத்துக்கு வழி வகுக்கிறாள். ஆக இருவர் நோக்கமும் ஒன்றே ஒன்று தான் .. ஜீவ உஜ்ஜீவனம். ஆம் என் மக்களாகிய நீங்கள் நன்றாக வாழ வேண்டும். நான் இருக்கிறேன் அஞ்சாதே..
பல கோவில்களில் அன்னை கட்டிய வலம்பித முத்திரையுடன் இருப்பதே இதை சொல்ல தான் ஆனால் இங்கோ அன்னை ஒரு படி மேலே வந்து சொல்லுகிறாள்...

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்





Sunday, January 16, 2011

சோகங்கள் இல்லை உண்மையான வேதனைகள்.....

சோகங்கள் இல்லை உண்மையான வேதனைகள்.....

சமீபத்தில் எங்கள் ஊரில் உள்ள சில இடங்களுக்கு ஊர் சுற்றி பார்க்க சென்றோம் குடும்பமாக(பிக்னிக்). உண்மையை சொல்ல போனால் எங்கள் ஊர் ஒரு அற்புதமான இடம்... தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் ஏன் உலக வரைபடத்தில் கூட எங்கள் ஊரை மார்க் பண்ணி இருப்பார்கள் அபப்டி என்ன ஊர் என்று கேட்க்குரிங்க்களா??? வான் போற்றும் குமரி தான் அது...

(படங்கள் வழியில் எடுத்தவை )


உண்மையாக சொல்லப் போனால் தமிழகத்தில் இரண்டு பருவங்களிலும் மழை பெரும் ஒரே மாவட்டம்... ஆனால் மழை அழிவு என்னவோ சற்றே குறைவு தான்... அதே போல் வெயிலின் அளவும் சிறிது குறைவு தான்(தற்பொழுது கொஞ்சம் அதிகம் தான்). ஆகா இப்படி ஒரு ஊரில் ஆண்டவன் என்னை படைத்தது நிச்சயமாக அவர் எனக்கு வழங்கிய உண்மையான வரம் தான். ஏன் என்றால் அதன் பசுமையும் பெருமையும் இன்றளவும் நிலைத்து இருப்பது தான். ஆறுகளில் பழையாறும் தாமிரபரணியும்(நெல்லை பரணியும் இதுவும் ஒரே மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தி ஆகிறது) கோதையும் பரளியும் வள்ளியாறும் பாயும் புண்ணிய பூமி..






ரப்பரிலோ  கொஞ்சி குலவும் வளம் கொண்டது. அதே போல் சொல்லி கொண்டே போகலாம் மீன்,நெல்,தேங்காய்,அண்டிபருப்பு, அன்னாசி பழம், பலா, பூ, பழம்  என்று கண்போரையும் கேட்போரையும் வியப்பில் ஆழ்த்தும் பூமி இது. குற்றாலம் போன்று இயற்கையாக உலக்கை அருவியும் சற்றே செயற்கையாக திற்ப்பரப்பும் கொண்ட பூமி இது. மலை வளமும் ஆறுகளின் செற்றமும் ஆன்மிக சிறப்பும் (நாகராஜா கோவில், பார் போற்றும் குமரி தெய்வம், தாணுமாலயன், வட்டாறு ஆதிகேசவன், சவேரியார் ஆலயம்,தக்கலை பீர் முகமது ஆலயம், சிதறால் சமண படிமனும்) உலகிற்கு பறை சாற்றுபவை.. இப்படி உள்ள இந்த பூமில் உள்ள இவனுக்கு என்ன கவலை என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரியுது



.


இதனை சிறப்புகள் இருந்தாலும் நான் ரசிப்பது என்னுடைய குமரியின் இயற்கை அழகை தான். நான் எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் இயற்கையின் வனப்பை நான் வியந்தது உண்டு. எத்தன்னை எத்தன்னை அழகு?? இப்படி யாக உள்ள இந்த அழகு எத்தனை நாட்களுக்கு என்பது தான் என்னுடைய வருத்தம். நீங்கள் கூகிள் maps எடுத்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் மொத்த தமிழகத்தின் குமரி மிக தனியாக தெரியும் பச்சை பச்சை யாக? ஆனால் இவை இன்னும் எத்தனை காலத்துக்கு தான் என்று எனக்கு தெரியவில்லை ?
என்னுடைய சந்ததி தலை முளைத்து பார்க்கும் போது இவை இருக்குமா இப்பொழுதே நகரின் முக்கிய இடங்கள் கட்டிட மலையை இருக்க வயல வெளிகள் பிளாட்டுகள் ஆக நெஞ்சம் பதை பதைக்கிறது.. என்னுடைய சிறு வயதில் என் தாய் தென்னை குருத்தை எதோ ஒரு அதிசய பொருளாக தந்தார்கள் ஆனால் இன்று அது அனைவருக்கும் மிக மிக எளிதாக கிடைத்து விடுகிறது .ஏனெனில் இன்று தான் தென்னன்தோப்புகள் எல்லாம் பிளாட்டுக்களாக மாருகின்றனவே?? என்ன செய்வேன் ஆண்டவா? இனி வரும் சந்ததிகளுக்கு காட்ட இடம் ஒன்றும் இருக்காதோ?? என்ன இவன் ஏதோ புதிதாக சொல்லாமல் பழைய விஷயங்களை சொல்லுகிறான் என்று நினைக்குரீர்களா?? என்ன செய்ய இந்த மூடனுக்கு இப்பொழுது தானே அறிவு பிறந்தது J ..
கலெக்டர் அவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு சற்றே இன்னும் சொல்ல போனால் மிகவும் அற்புதமான ஆயுதம் தான். மக்களும் சற்றே பிளாஸ்டிக்கை ஒழித்து விட்டனர் என்பது ஆறுதல்.
 மேலும் நான் உங்களை விட மிக மிக பெரியவன் என்னிடம் விளையாடுபவர்கள்  மிக மிக மோசமான விளைவுகளை அனுபவிப்பிர்கள் என்று இயற்கை எச்சரிக்க தொடங்கியதாகவே எனக்கு தோன்றுகிறது சுனாமியும் இப்போது ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும். மனிதரிடம் தன்னுடைய ஆற்றலை இப்படி நிரூபித்து இருக்கிறது இந்த வெள்ளப்பெருக்கு. ஏன் அழிவு என்று சொல்லாமல் எச்சரிக்கை என்றேன் என்றால் தமிழகதிலயே அதிக மழை இந்த புயல் குமரிக்கு தந்தாலும் மனித அழிவு என்னமோ மற்ற மாவட்டங்களை பார்க்கும போறது குறைவாக இருத்தல் ஆறுதல். என்னை பொறுத்த வரை இயற்கையோடு விளையாடுதலும் தீக்குள் விரல் வைப்பதும் ஒன்று தான். அவை எல்லை மீறும் போது சேதம் என்னவோ மனித குலத்துக்கு தான்.
(குமரியின் கோர மழை காட்சிகள்)






(இவை பழையாறு தன்னுடைய கோர வடிவை காட்டியவை )
(குழித்துறை வெட்டுவன்னி சாஸ்தா ஆலயம் மழைக்கு முன் பின்)









(இவை மார்த்தாண்டம் தாமிரபரணியின் கோர வடிவம்)

ஏதேனும் சொல் பொருள் இலக்கணப்பிழை இருந்தால் மன்னிக்க இந்த அடியவன் அனைவரையும் முக்கியமாக தமிழ்தாயையும் வேண்டுகிறேன்
வாசித்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி
அடியவன்
சந்தனக் கண்ணன்